Thursday, May 2, 2024
Homeபுனைவுகவிதைபதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 3 (சீனக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு)

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 3 (சீனக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு)

வசந்த பெளர்ணமி
                 -துஃபு   (தமிழில் : செ.ச.செந்தில்நாதன்)

 
பாழ்பட்டிருக்கிறது நாடு
மாறமறுக்கின்றன மலைகள் ஆறுகள்
நகரத்தில் வசந்தம்; புல் புதல்கள் செறிவாய் படர்கின்றன
காலம் துயர்தர, பூக்கள் கண்ணீர் சிதற்றுகின்றன
பிரிதல் வெறுத்த பறவைகள்; படபடக்கிறது என் நெஞ்சம்
தீக்குண்டங்கள் மூன்று திங்கள்களைக் கண்டும் தொடர்கின்றன
வீட்டிலிருந்தோர் கடிதம், அது பதினாயிரம் பொன் பெறும்
நரையோடிய தலை, மயிர் உகுத்துக்கொண்டிருக்கிறது
மெலிந்து போனது அக்குடுமி, கட்டிச்செருகமுடியாமல்

 – துஃபு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular