Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்பாலஜோதி ராமச்சந்திரன் கவிதைகள்

பாலஜோதி ராமச்சந்திரன் கவிதைகள்

1

கவிதைகளைத் திருடித்தின்பவன் அவன்
சரிந்த பெருத்த வயிற்றுக்குள்
களவாடியக் கவிதைகள் கொழுப்பென மண்டிக்கிடந்தன
திமிரும் அன்பும் அடங்க மறுத்தலும் ரௌத்திரமுமே கவிதைகளின் குணமென நினைத்திருந்தேன்
அவை கொழுப்பாய் மாறும் ரசவாதம் கொண்டவையென்பதை அவன் தொப்பை அறிவித்தது
ஒமேகா ஒன்று முதல் ஆறு வரை
அறிந்தயெனக்கு முதல்தடவை கவிதைக்கொழுப்பை அறிமுகம் செய்தான்
வலியின்றி.. ரத்தமின்றி… சேதாரமின்றி அவன் வயிறு குலுங்கிற்று
அந்தக் கொழுப்பை தின்பதற்கு கொஞ்சம் வெட்டிக் கொடுத்தான்
சிறு பெண்குழந்தைகள் முதல் இளம்வயதுப் பெண்கள் வரைக்கும் பிடித்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது
‘இதை அப்படியே சாப்பிடலாம். நீயும் என்னைப்போல் மாறு’ என்றான்
சாப்பிட்டு நானும் கவிதைத் திருடியானேன்
அவன் சொல்லாமல் விட்ட ஒன்றுண்டு
‘இதை விரும்பி சாப்பிடுபவனுக்கு வயிறு பெருக்கும். விரும்பாமல் சாப்பிடுபவனுக்கு எது வேண்டுமானாலும் பெருக்கும்’
எனக்கு மார்புகள் பெருத்தது.

2

வளி வழிந்தோடும்
மண்டலமெங்கும்
அலைந்து திரிகிறான்
புணர்ச்சிக்குறி எப்போதும்
நீர்த்தக்கனவுகளில்
லயித்தின்பம் கொள்கிறது
தேடித்தேடித் தேடியும்
இன்னும் கிடைத்தபாடில்லை
புணர்வதற்கான ஒற்றையிரவு
இடதுகையில் ஆரமாய்
மின்னிக் கொண்டுதானிருக்கிறது
சேகரித்த அமாவாசைகள்
வழியெங்கும் மல்லாந்துக் கிடக்கின்றன தீய்ந்ததான
பௌர்ணமிகள்

***

பாலஜோதி ராமச்சந்திரன் – இவர் தற்போது வசிப்பது புதுக்கோட்டை நகரில்.மூத்தப்பத்திரிகையாளர். விகடன், குமுதம், நக்கீரன் ஆகிய நிறுவனங்களில் சென்னை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டச்செய்தியாளராக இருபது வருடங்களுக்கு மேலாகப் பணிபுரி க்கிறார்.இவர் எழுதிய ‘சுழியம்’ நாவலின் ஆசிரியர் (ஜீரோ டிகிரி பரிசுப்போட்டியல் – நெடும்பட்டியலுக்குத் தேர்வானது).

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular