கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

0

லும்பர்கள்

லும்பன்-1

*

பார்வையை உடைத்துவிட்டு மண்டைக்குள்
புகுந்து அழிச்சாட்டியம் பண்ணுகிறது
கண்முன் கிட்டிடாத எல்லையற்ற
பொழுது

சம்பாதித்துக்கொள்ளத் தவிக்கும்
ரொட்டித் துண்டை
கைப்பற்றி எக்காளமிடுகிற அரச யந்திரம்
முடுக்கிவிடுகிறது பசியை
அனுதினம்

வக்கு வழியற்று நோக்கும் திக்கில்
சூப்பர் மார்க்கெட் முன்னே
நீண்ட வரிசையில்

முகமூடி அணிந்த சமூக விற்பன்னர்கள்
இடைவெளி தரித்த கோடுகளுக்கு
ஊடே
நிற்கின்றனர்

காயும் வெயிலைச் சலித்தபடி

அய்யா
பசி

காசு வேண்டாம்
ஒரு ரொட்டி பாக்கெட்?


லும்பன்-2

*
நடுங்கும் கைவிரல்களில் உயிர் நரம்புத்
துடித்துத் துடித்து
மண்டைக்குள் பிசாசு ஒன்று வெடிக்கிறது

சத்தம் கேட்குதா

ரத்தவாடையை கவுச்சி என்கிறாயே
என்னருகே வந்து மோந்து பார்த்திடாத
பசியை

எங்காவது விற்றுத் தொலைத்து

நாலு முட்டைகளையாவது வாங்கி வாயேன்
சனியனே


லும்பன்-3

*

எழவு விழுந்த கட்டடத்திலருந்து ஏன்யா
வெளியே வர்றீங்க
எங்க தாலிய அறுக்கவா

ஸார்
கார்பரேஷன் எஸ்.ஐ லெட்டர் இல்லாம
கலக்டரே வந்தாலும் பரிசோதனை கிடையாது
கிளம்புங்க

ரிசல்ட் பாசிட்டிவ்னா நாங்களே வந்துருவோம்
சும்மா நொய் நொய்யின்னு டார்ச்சர் பண்ணாத
படிச்சவன் தானே நீ
மூளைய யூஸ் பண்ண மாட்டியா

சமூகப் பொறுப்பு இருந்தா
இப்படி கடையத் தொறந்து வைப்பியா
மூட்ரா நாயி

எங்கே போயி ஊர மேய்ஞ்சிட்டு வர்ற
எறங்கு வண்டிய வுட்டு

மச்சி ஈ-பாஸ் ட்ரை பண்ணு
பேசாம ஊருக்கே பறந்துடலாம்
இது வேலைக்கு ஆவாது

ஒரு குவாட்டருக்கு வக்கில்லாட்டி
என்ன பொழப்புடா
ச்சே ஊரா இது

தூத்தேறி

ஊரடங்கு
ஊரடங்கு
ஊரடங்கு

6 டூ 6
ஊரடங்கின மண்டைக்குள் பிளக்கிறது
மானங்கெட்ட உலகம்

டுடும் டுடும் டுடும் ட்டுட்டுடும்
டுடும் டுடும்

பாதுகாப்பான பால்கனிகளில் முளைக்கின்றன
முகமூடி அணிந்த முகங்கள்

தலைவன் இல்லாத கழைக்கூத்தாடி குடும்பமொன்றின்
தாயும் இரண்டு மகவும்

அப்படி
தினம் பகல் பொழுதில் ஆளற்ற தெருவில்
மர நிழலில் ஒண்டியபடி
அடிக்கிற

மேளத்தின் தாளத்துக்கு

இடுப்பசைத்து வளைத்து ஆடியபடி
அம்மாவின் திட்டு வாங்கி கண்ணீர் மல்க
ஆடுகிறதுகள்

பெருசும் சிறிசும்

டுடும் டுடும் டுடும் ட்டுட்டுடும்
டுடும் டுடும்


கவிதைக்காரன் இளங்கோ
சென்னை
[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here