Thursday, February 12, 2026
Homesliderவிஸ்லாவா சிம்போர்ஸ்க்கா & வென்டி கோப் கவிதைகள்

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா & வென்டி கோப் கவிதைகள்

தமிழில் : மிருணா

மூன்று வினோதமான வார்த்தைகள்

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

வருங்காலம் என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும்போது
அதன் முதல் அசை ஏற்கனவே இறந்தகாலத்திற்கு உரியதாகிவிடுகிறது
அமைதி என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும்போது
அதை நான் அழிக்கிறேன்
ஏதுமில்லை என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும்போது
எந்த உயிரிலியாலும் ஏந்திக்கொள்ள இயலாத ஒன்றை நான் உருவாக்குகிறேன்.

***

அந்த ஆரஞ்சு

வென்டி கோப்

மதிய உணவுவேளையில் நான் ஒரு பெரிய ஆரஞ்சை வாங்கினேன் —
அதன் உருவளவு எங்கள் எல்லாரையும் சிரிப்பிலாழ்த்தியது
அதை நான் உரித்து ராபர்ட்டிடமும், டேவிடமும் பகிர்ந்து கொண்டேன் –-
கால்பங்குகள் அவர்களுக்குக் கிடைத்தன நான் பாதியை உண்டேன்

அந்த ஆரஞ்சு, அது என்னை மிக மகிழ்ச்சியாக உணர வைத்தது,
சாதாரண விஷயங்கள் அப்படி அடிக்கடி செய்வது போல
இப்படி கொஞ்சநாட்களாகத்தான். கடைகளுக்குச் செல்வது. பூங்காவில் நடப்பது.
இதுதான் நிம்மதியும், நிறைவும். இது புதிது.

நாளின் எஞ்சிய பகுதி சுலபமாகவே இருந்தது.
நான் என் நிரலில் உள்ள எல்லா வேலைகளையும் செய்தேன்
அவற்றை ரசித்தேன், உபரி நேரம் கூட எனக்கு இருந்தது
நான் உன்னை நேசிக்கிறேன். நான் உயிருடனிருப்பது குறித்து மகிழ்கிறேன்.

***

தேர்வும் & மொழியாக்கமும் : மிருணா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here