சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி மிகத் தாமதமாக மார்ச் இதழைக் கொண்டு வருகிறோம். இந்த தாமதத்தைப் பொருத்துக்கொண்ட ஆசிரியர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.
இரண்டு சிறப்பிதழ்கள் வெவ்வேறு பொறுப்பாசிரியர்களைக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த இதழுக்கு புகழ்பெற்ற ஹொகுசாய் அவர்களின் படங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். ஹொகுசாய் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் நிறையவே எழுதியிருக்கிறார்.
ஒரு பக்கம் கொரோனா இரண்டாம் அலையும், மற்றொரு பக்கம் சட்டமன்றத் தேர்தலும் மிரட்டிக்கொண்டு வருகிறது. தொற்றுப்பரவலுக்கு தடுப்பூசி போல, ஜனநாயகத்தைக் காக்கும் நேர்மையான ஓட்டுக்கள் தடுப்பூசியே.
அடுத்த இதழில் குறுநாவல் போட்டி முடிவுகளை எதிர்பார்க்கலாம் (அதற்கு முன்னேயும் வரலாம்)
நன்றி
ஆசிரியர் குழு சார்பாக
ஜீவ கரிகாலன்