Friday, September 22, 2023
No menu items!
No menu items!

மழையாதல்

எல்லார்க்கும்
எல்லாமும்
சிற்றஞ்சிறுபரல்
உதிர்க்கும்
செவ்வி
எல்லாவிடத்தும்
ஓர் மெல்லினம்
யாருக்கேனும் வாய்த்ததுண்டா
முத்தாகும் சித்தி
தைரியமாய் உகுக்கலாம்
கண்ணீரை
துடைக்க உண்டு
நீர்க்கைகள்
இரைச்சல் சங்கீதம்
மழை உணர்த்தும்
தாய்மடிச்சூடு
என்பிலதனை வெயில்போலக் காயுமே
மழையில்லா மனம்
நின் குழல் பெய்த மழை
துளிர்த்திடச் செய்யும்
நீயெனும் பூவை
யாரும் ஆகலாம்
மழை கண்டு ஆடும் மயில்

– மணிவண்ணன் வெங்கடசுப்பு

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular