Wednesday, January 22, 2025
Homeபுனைவுகவிதைபதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் - 01

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 01

 

தன்னந்தனியனாய்
-துஃபு       
தமிழில் -செ.ச.செந்தில்நாதன்

விண் முகட்டில் ஒரு வல்லூறு,
ஆற்றின் கரைகளுக்கிடையில்
சிறகடிக்கின்றன
ஒரு ஜோடி நாரைகள்.
பாய்ந்து கொத்திச்செல்வது எளிது,
அவை முன்பின்னோடுகையில்.

புல் மீது பனித்துளிப் படர்ச்சி.
விரிந்திருக்கிறது சிலந்தி வலை,
இறுக்கிமூட அணியமாக.
இயற்கையின் நிகழ்பாடுகள்,
மனிதர்களின் செயல்பாடுகளை அண்மிக்கின்றன.

தன்னந்தனியனாக நிற்கிறேன்,
பதினாயிரம் கவலைகளுடன்.

-துஃபு

(மூலம்: kōng wài yī zhì niǎo…) து ஃபு (Du Fu. கிபி 712–770). சீன மகாகவிகளில் பிரதானமானவர்.

 

 

 

(ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular