இதயம் கனத்த மழை
வழிவது காலத்தின் சீழ்.
இருள் படிந்த மலைகளில் நெளிகின்றன
விஷம் கக்கும் மேகங்கள் .
காலின் கீழே சரளைக் கற்கள்
ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஏதேதோ .
மோனங்கள் விழித்தன
பெரும்பகலை விழுங்கியது காலம் .
ராத்திரி நீண்ட பயணம்
கால்களில் இரத்தம் வழிய வழிய
நடக்க வேண்டும்
வெளிறித் துடிக்கும் இதயத்தைக் கையில்ப்
பிடித்தபடி .
மரணம் நின்று கொண்டிருக்கிறது
வரும் வழியில் இரண்டு பறவைகள்
சொல்லிச் சென்றன .
அச்சமற்ற நிழலில் தொங்கிக்கொண்டிருந்தது
வலிமையற்ற எனதாசைகள் .
நெருங்கி விட்டேன்
கண்களில் மரணம்
கைகளில் நகங்களில் மயிரில்….
இதயம் கருகிகிறது ….வாசனை வருகிறது
யாருமில்லை ..யாருமே
பெரும் இருள் சிதிலமடைந்தன கேள்விகள் .
மீண்டும் விழித்தது காலம்
கவ்வியதை விட்டபடி சிறகுதைத்து மீள்கிறது
வெளிக்கே .
– கிரிஷாந்