முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி – 04
கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம்

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி எங்கெல்லாம் ஒரு கண் வரைகிறானோ, அங்கெல்லாம் அந்தக் கண் பார்ப்பதை கண்காணிக்கும் சித்தி பெற்றிருந்தான்.
அவன் கண் வரைந்த இடங்கள்
ஒரு எறும்புப் புத்து
ஒரு இளவரசியின் குளியலறை
ஒரு படையின் பாசறை என

ஒரு கஜானாவின் பாதுகாவலனின் கையில் பச்சை குத்திய கண்
ஒரு மிகமர்மமான ஔடதக்குறிப்பின் வலது ஓரத்தில் மிகச்சிறிய கண்

தலைத்துண்டிக்கப்படும் தண்டனை பீடம்
ஒரு கோயில் விக்ரகத்தின் வலது கண்ணை சிற்பியை மயலில் ஆழ்த்தி செதுக்கியிருந்தான்

இன்னும் பல்லாயிரம் கண்கள்
மன்னனின் ஆணையின் படி மந்திரவாதியின் கண்கள் பொசுக்கப்படும் போது
கனல் சிவந்த இரும்புக்கோலை ஏந்தியவனிடம்
“இனி நீ தான் நாயகன்” என்றான்.

*******
கருத்துகளுக்கு :
கதை : பாபாகா – [email protected]
ஓவியம் : கணபதி சுப்ரமணியம் – [email protected]