Friday, March 29, 2024
Homesliderயாவரும் செப்டம்பர் 2020 இதழ்

யாவரும் செப்டம்பர் 2020 இதழ்

யாவரும் செப்டம்பர் இதழ் வெளியாகிவிட்டது.

கடந்த மாதம், நண்பர்களின் கூட்டு முயற்சியில் EIA தமிழ் மொழிபெயர்ப்பு செய்த பின்னர் கிடைத்த முக்கியத்துவம். நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும் என்கிற புரிதலுக்கான வெளியை உறுதிப்படுத்தியிருக்கிறது… ஆம் நீண்ட தூரம் தான். மெல்ல மெல்ல ஆரம்பித்துவிட்டோம். நண்பர் நந்தகுமாருக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஊக்கமளித்த விழியனுக்கும் நன்றி. தமிழக சட்டசபைத் தேர்தல் வேறு நெருங்குவதால், நிச்சயமாக அரசியலுக்கான இடம் நம் இதழில் விரிவடையும். கொரோனா தொற்று கற்றுக்கொடுத்த பாடமாகக் கூட எடுத்துகொள்ளலாம். எல்லா விழுமியங்களையும் மாற்றிப் போட்டுவிட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாய் நம்பிக்கொண்டு இதை தட்டச்சு செய்வது எத்தனைப் பெரிய அப்பாவித்தனம்.

இந்த புதிய இயல்புத்தன்மை நம்மை எங்கே இட்டுச்செல்கிறதோ அங்கே பயணிப்போம். இலக்கு ஏதோ ஒரு புள்ளி என்றில்லை பயணிப்பது தான்.

***

கொரோனாவை அடிப்படையாக வைத்து நடத்திய க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020ன் முதற்கட்ட தேர்வு முடிவுகள் நெடும்பட்டியலாக நாற்பது எழுத்தாளர்கள் அதில் உள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துகள். விரைவில் இறுதி முடிவும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்

வழக்கம்போலவே சிறுகதைகள் குறிப்பிடும்படியான எண்ணிக்கையில் வந்துள்ளன – லாவண்யா சுந்தர்ராஜன், வேல்விழி முகில்நிலா, அகர முதல்வன், ரமேஷ் ரக்சன், சிவகுமார் முத்தய்யா, மணி எம்.கே மணி,, மௌனன் யாத்ரீகா, அருண்.மோ & ஆத்மார்த்தி என பங்களித்துள்ளார்கள்

கவிதைகள் வா.மு.கோமு, அமிர்தம் சூர்யா, தாமரை பாரதி, சுஜாதா செல்வராஜ், கௌரி ப்ரியா ஆகியோர் பங்களித்துள்ளார்கள்

நூல் விமர்சனமாக குட்டி ரேவதியின் விரல்கள் குறித்து தென்றல் சிவகுமாரும், ப்ளூமராங் பக்கங்கள் எனும் நூல் விமர்சனப்பகுதியில் சாரு நிவேதிதா குறித்தும் எழுதியுள்ளார்கள்

காத்திரமான சமகால அரசியல் விசயங்களை பாரதீ அவர்களும், கார்குழலி ஸ்ரீதர் அவர்களும் கட்டுரையாக வடித்துள்ளார்கள்
நாராயணி சுப்பிரமணியன் சூழல் பகுதியில் கட்டுரை வழங்கியிருக்கிறார். தொடர்ந்து அவர் நிறைய கட்டுரைகளை எழுத வேண்டும்.

ஜா. தீபா எழுதும் “நினைவோ ஒரு பறவை” தொடரில் ஏ.பி.நாகராஜன் குறித்து இந்த பகுதி வந்துள்ளது. திரும்பிப் பார்க்க வைக்கும் கட்டுரை

சென்ற மாதமே பெரிதும் கவனிக்கப்பட்ட எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடனான கேள்வி பதில் பகுதியின் இரண்டாம் பாகம் இதிலும்.

டிராட்ஸ்கி மருதுவுடனான ஒரு சந்திப்பை ஆவணப்படுத்தியும் சில வருடங்களாகவே அதனை பதிவு செய்ய இயலாமல் போக, இப்போது கிடைத்த வாய்ப்பில் அவற்றை சரிபார்த்து வலையேற்றிவிட்டோம், ஒரு அசல் கலைஞனின் தீர்க்க தரிசனங்கள் நிறையவே இதில் தெரியும்.

அது போல, மொத்த இதழுக்கும் ஜாக்ஸன் போலாக்கின் ஓவியங்களை வைத்து அழகுப் படுத்தியிருக்கிறோம். மோசமான அரசியல் சூழலில் சிக்கியிருக்கும் நமக்கு கலை கொடுக்கின்ற கொஞ்சநஞ்ச ஆறுதல்களையும் அரசியல் செய்தே பிரித்து எல்லாவற்றையும் அதிகாரத்திற்கே இரையாகக் கொடுக்கும் போக்கு மலிந்து போன இக்காலத்தில், கலை இயல்பாகவே தன் மீது ஊற்றப்பட்ட சாயங்களைத் தோலுரித்துவிட்டுத் தொடர்ந்து இயங்கும் என்று தோன்றுகிறது. இன்றைய அரசியலுக்கு அன்றைய கலைஞர்களை பயன்படுத்தும் மோசமான முன்னுதாரணங்களை மறக்கடிக்கச் செய்யும் இந்த கலைஞனின் படைப்புகள் குழந்தமையை மீட்டுத் தரும் என்கிற நம்பிக்கை அது. அது எவ்வகையிலான படிநிலை என்றும் அதில் எத்தனை உறுதியானது என்றும் புரிந்துகொண்டவர்கள் நிசப்தமாகவே பயணிப்பார்கள். இதென்ன பிரமாதம் என்று இங்க் ஃபில்லரும் சார்ட் பேப்பரும் வாங்கிக் கொண்டு டேபிள்மேட்டை விரிக்கும் சுதந்திரம் எல்லோருக்குமானது அதை மறுப்பதற்கில்லை. அவரவர் தேர்வு. இது நம் தேர்வு —- >>> யாவரும் செப்டம்பர் இதழ்

இதழ் குறித்த அபிப்பிராயங்களை, குறைகளை [email protected]ற்கு அனுப்பி வையுங்கள்..

வேண்டுகோள் : – இணையதளத்தை தொடர்ந்து நடத்தவும், எங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை தொடர்ந்து எட்டவும் உங்கள் உதவியும் தேவைப்படுகிறது. அது எங்களை ஆதரிப்பது, விமர்சனங்களைத் தருவது, இதழினை மற்றோருக்குப் பகிர்வது ஆகியவற்றால் நிறைவேறும். (எங்கள் தாய் நிறுவனமான – யாவரும் பப்ளிஷர்ஸ் நூல்களை வாங்குவதும் கூட அவ்வாறனதே, எப்படி? <<<<—– இங்கே சொடுக்கவும்).

மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்

மாறா அன்புடன்
ஜீவ கரிகாலன்


ஆசிரியர் குழு :

வேல் கண்ணன் லா-வோட்-ஸூ கவிதைக்காரன் இளங்கோ அகர முதல்வன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular