Friday, March 29, 2024
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது - 05 - ஓவியக்காட்சி - நடைபயிற்சி 2

யாளி பேசுகிறது – 05 – ஓவியக்காட்சி – நடைபயிற்சி 2

ண்பர் ஒருவருடன் இரவு நேரங்களில் சென்னையின் தெருக்களில் நடமாடும் பொழுது நமக்கு கிடைக்கும் சில காட்சிகள், வழக்கமாக நாம் பார்க்கும் பகல்காட்சி போல்; மனித நடமாட்டத்தில்; வேலைக்கு செல்லும் அவசரங்களில் இருப்பது போலவே இரவுகளில் இருப்பது இல்லை என்று பேசிக் கொள்வோம். அவ்விரவு நேரங்களில் ஒழுங்கான வரிசையில் எரிந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகளில் இருந்து, மின்சார ரயில், தாழ்வாகப் பறக்கும் விமானம் என நாம் பார்க்கும் வழக்கமான காட்சிகளில் கிடைக்கும் அந்த வழக்கமான கடந்து செல்லும் உணர்வுகள் கிடைப்பதில்லை. அந்த காட்சிகளில் யதார்த்தத்தினை விஞ்சிய ஒரு அதி/உயர் யதார்த்தம் இருந்தது (HYPER REALITY). 

உண்மைகள் மீதான கட்டுமானங்கள் சிதைத்துவிட்ட அதீதப் புனைவின் நிலக்காட்சி

anupam 3சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் (மார்ச் மாதம் முழுதும்) ஒரு ஓவியக் கண்காட்சிக்கு சென்று வந்தேன்.  சென்னையைச் சேர்ந்த கலைஞரான பார்வதி நாயரின் கண்காட்சி பற்றிய கட்டுரை இது.

AMBIGUITY OF LANDSCAPE என்ற தலைப்பில்(theme) கண்காட்சி நடைபெறுகிறது, பார்வதி நாயர் ஒரு ஓவியர் மட்டுமல்ல, அவர் ஒரு நல்ல கவிஞரும், நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும் கூட. 25வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் படைப்பாளி. அகண்ட நிலக்காட்சி (landscape)ஓவியங்களாக நாம் இது வரை பார்த்து வந்த, நாம் நம்பிக்கொண்டிருக்கும் landscape காட்சிகளில் மீது இவரது படைப்புகள் சின்ன சலனமாவது ஏற்படுத்தும் என்பது என் நம்பிக்கை.

பெரும்பாலும் அவரது படைப்புகள் HAND-DRAWN GRAPHITE ON WOOD மற்றும் Archival/Giclee Printகளாக இருக்கின்றன.  பார்வதி தன் படைப்புகளில் ஏற்படுத்தும் சலனம் என்னவென்றால் மைக்ரோஸ்கோபிக் கூறுகளை landscapeகளில் கொண்டு வந்த படைப்பிகளிலும் அவற்றைத் தொகுத்திருக்கும் விதத்திலும் என்று சொல்லலாம். இது வெறும் யுக்தி தானே என்று சொன்னால், ஆம் அது வெறும் யுக்தி மட்டுமே. மைக்ரோஸ்கோப் வழியே நாம் பார்த்த செல்களின் தோற்றத்தைப் பார்ப்பது போன்ற யுக்தி தான், அந்த யுக்தி பார்வையாளனின் புரிதலுக்கான யுக்தி. ஆனால், இந்த அறிவியல் உண்மைகளை ஒரு கலை படைப்பாக மாற்றுவதற்கு பின்புலமாக இருக்கும் சமூகம் பற்றிய புரிதலாக பார்வதி அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. இவரது படைப்புகள் வழியே தெரியும் முப்பட்டகக் காட்சிகளில் சமூகம், அரசியல், கலாச்சார மற்றும் வரலாற்றின் நிறப்பிரிகைகளைப் பார்க்க முடிகிறது. 

ரு seriesஇல்இவரது மூன்று வேலைப்பாடுகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைப்பு UNDER THE SKIN என்று நினைக்கிறேன். மூன்று செல்களின் வடிவங்கள் வரையப்பட்டிருக்கிறது. வேறு வேறு மூன்று ethnicityகளுடையது, ஒன்று கருப்பின மக்களுடையது, இன்னொன்று ஆசிய மக்களின் நிறம், மூன்றாவது ஐரோப்பிய மக்களின் பொது நிறம். இந்த மூன்று படைப்புகளையும் ஒரே panelஆக நீங்கள் பார்த்தால் மட்டுமே ஓவியரின் எண்ணம் வெளிப்படும். நிறவெறியின் தாக்கங்களே இந்த கலைபடைப்பின் வெளிப்படுத்தும் நோக்கமாக இருக்கிறது, அமெரிக்கக் கலைஞரான Bob Dalynஇன் வரிகளும் அங்கே எழுதப்பட்டிருக்கிறது.

Under the Skin : Parvathy Nair
Under the Skin : Parvathy Nair

 றிவியல் நுண்விஷயங்களை இப்படி அகண்ட landscapeகளில் விரித்து வைத்திருக்கும் பார்வதி, அதே நேரத்தில் மிக அகண்ட பரப்புகளையும் landscapeகளில் சுருட்டியும் வைத்திருக்கிறார். பறவைகளின் கண் பார்வையில் உயரமான இடத்திலிருந்தோ அல்லது விமானம் அல்லது செய்ற்கைக் கோள் படங்களாகவோ நாம் பார்க்கக் கூடிய காட்சிகளையும் வைத்திருக்கிறார். ஒரு தொகுதியில்(series)இல் தில்லி,மும்பை,கொல்கத்தா, சென்னை என்கிற மாநகரங்களின் அமைப்புகளை தந்து Graphite வேலைகளில் வரைந்திருக்கும் விதம் நமக்குள் இருக்கும் இறுக்க நிலையைக் காட்டுகிறது, இம்மாநகரங்களில் தன்னை விஸ்தரிக்கும் திறன் பெற்ற சென்னையில் கொஞ்சம் இறுக்கம் குறைந்து தான் இருக்கிறது. நிச்சயமாக இந்தப் பார்வை என்னுடையதாகத் தான் இருக்கும், இருக்கலாம் தப்பில்லை.

க்கண்காட்சியில், Graphite workகளைத் தவிர்த்து சில அச்சுகளும்(Print) இருக்கின்றன. பார்வதி நாயர் ஒரு முக்கியமான visual artist  என்றாலும் இந்தக் கண்காட்சியின் highlightஆக நான் கருதுவது இவரது graphite வேலைப்பாடுகளைத் தான். தண்டுவடம், கண்கள், எலும்பு என்று எடுத்துக் கொள்ளும் subjectகளின் வழியே, அவர் உடல் மீதான சமூக, அரசியல் பார்வைகளை நேர்கோடுகளில் Graphait கொண்டு interpret செய்கிறார். உடல் பற்றிய நுண்ணறிவின் வழியே ஒரு சமூகத்தின் பிரச்சினைகளில், சமூக அமைப்பில் உள்ள சிக்கல்களைப் பார்க்கும் இவரது படைப்புகளை பின்னமைப்பியலின் (post structuralism) கூறுகளோடு கவனிக்க முடியும், இவரை ஒரு மினிமலிஸ்டாக சிலர் கூறுவது போல என்னால் அவதானிக்க முடியவில்லை. பெரும்பாலும் இது போன்ற இசங்களில் வகுப்பது படைப்பாளி மீது தீர்மாணங்களையும், அபிப்பிராயங்களையும் புகுத்துவதாகத் தோன்றுவதால் அவர்களது தனித்தன்மைகள் பற்றிய அக்கறை குறைந்து விடுகிறது.

றிவியலுக்கும் வரலாற்றிற்கும் மிக நெருக்கமாகவும், Anti-philosophical தன்மையோடு அனுகும் படைப்புகளாக நான் அவதானிக்கும் சில படைப்புகள் நமக்கு முற்றிலும் புதிய உணர்வுகள் தருகின்றன. பெண்ணியம் சார்ந்த உளவியல் பார்வைகளாகவும் இவரது சில படைப்புகளை கவனித்தாலும், ஒரு உலகளாவிய பார்வைக்கான அவசியத்தை உணர்ந்திருப்பதால், அறிவியலோடு மிக நெருங்கி, மனிதனை செல்களாகப் பிரித்துப் பார்க்கிறார்.

வர் ஒரு கவிஞர் என்று சொன்னேன் அல்லவா? அவரது கவிதை ஒன்று ஒரு தொகுப்பாக craft செய்யப்பட்டுள்ளது :  MAPPINGS :IN A FRAGMENTED CITY

outside the electric pin points
that clothe the nightscape
shimmer off and on
whispering their secret images

மிக அற்புதமாக இரவைப் பற்றிய இவரது வரிகளில் இருக்கும் காட்சிப்படிமம் இவரது உளவியல் மற்றும் அழகியல் சார்ந்த வெளிப்பாடுகளை, aesthetic கூறுகளை கவனிக்க வைக்கிறது. ஆனால் பின்னவீனத்துவ வாதியாக இவரது ஓவியங்களில் அவற்றைக்(அழகியல்) காண முடிவதில்லை. அதே நேரம், பார்வையாளனுக்கு அந்த சுதந்திரம் இருப்பதால் அவன்  எதையும் தேடி எடுக்க முடியும்.

வ்வழகியலை ஒரு இருபது நிமிடம் செலவழித்து அவரது AN OCEAN IN EVERY KITCHEN எனும் படைப்பில்(video loops) கவனித்து கொள்ளலாம்.

ன்னை மிகவும் ஈர்த்த ”மார்கபோலொ” எனும் படைப்பு பற்றியும் சொல்லவேண்டும், மார்கபோலோவின் கடல் பயணத்தைப் பற்றியது, படைப்பின் கீழ் பகுதியில் உலக வரைபடம் இருக்கின்றது, சில nautical calculationகள் இருக்கின்றன.  கடல்வழிப்பாதை, வான்வழிப்பாதை என இன்றைய நவீன உலகின் வரையறுத்து வைத்திருக்கும் வரலாற்றில் எத்தனை சுவாரஸ்யம் இருக்கின்றன?? எத்தனை கதைகள் இருக்கின்றன?.

வீனம், பின்னவீனத்துவம், தகர்த்தெறிதல்,இருத்தலியல் என எல்லா இயங்களுக்குமே பெரும்பாலும் ஓவியர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள், பார்வதி நாயரும் தனக்கென ஒரு பாணியைக் கையாள்கிறார் அவரது படைப்புகளோடு விளக்கங்களும் தனித்தன்மையுடன் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எழுத்து சார்ந்தும், தீவர வாசிப்பிலும் இயங்கும் நண்பர்கள் கண்டிப்பாக சென்று பார்த்து வர வேண்டும் என்பது என் விருப்பம். ஓவியங்கள் மட்டுமின்றி அதன் தொழில்நுட்பங்கள், நவீன வளர்ச்சி என content மற்றும் appearance என உங்களுக்கு புதிய உணர்வுகளை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அறிவியல், வரலாறு சார்ந்த உண்மைகள் கொண்டு எழுப்பப்பட்ட இவரது கலை படைப்புகள், அழகியல் மற்றும் புனைவுகளைத் தகர்த்தெரிந்த Landscape காட்சிகளாக புத்துணர்வு அளிக்கின்றன.

 

ஜீவ.கரிகாலன்

தொடர்பு : [email protected], www.thoyyil.blogspot.com

 

பார்வதி நாயர் படைப்புகள்
The Ambiguity of Landscapes (MARCH-2014 -SOLO SHOW)
Vedha Gallery:
Thousand Lights, Nungambakkam High Road
Chennai

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular