Friday, March 29, 2024
Homesliderயவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

பெட்ரோ பராமா

கை ரிக்ஷாக்காரர்கள்
கனவான்களை அமர வைத்து
சாலையில் இழுத்துக் கொண்டு ஒருகாலத்தில்
ஓடினார்கள்
பின்னர் வானுயர் சிலைகள்
மந்திர்கள் மசூதிகள் கனரக லாரிகள்
இனிப்பு வாலாக்கள்
அன்றும் இன்றும்தலைநகரின் வணிகத்தெருக்களில்
மூத்திரம்பெய்பவர்கள் எண்ணிக்கை பல லட்சம்
தெருவிற்கு நாலு வந்தேறி வணிகச் சண்டியர்கள் சத்திரங்கள்
ஊரைச்சுற்றி தூதரகங்கள் கல்லறைகள்
இரண்டு ரொட்டிச் சால்னா பாவ் பாஜி உள்ளங்கையில் புகையிலை வைத்துக் கசக்கிகடைவாயில் அதக்கும் தம்பக் நகரம்
அங்கே தெரு முழுக்க எச்சில்
மெல்லிய பருத்தியில் வடிவமைத்த குர்தாக்கள் ஜெய் காளி சூலங்கள்
ராணா பிராதாப் சிங்கோ
சுல்தான்களோ இரஜ புத்திரர்களோ
தலைநகரின் திசை வடக்கு
மூன்று பானிபட் யுத்தங்கள்
எழுநூறு ஆண்டுகளாய் அது ஒரு புற நகரம்
மேலும் எல்லோரும் இறந்து போனவர்கள் அல்லது
இன்னும் கொல்லப்பட வேண்டியவர்கள்
அவர்கள் பழங்கதைகளைப் இறந்தவர்கள் மொழியில் இன்னும் சொல்வார்கள்
கொலைநகரம் தில்லி
இஸுலாமியர்களை இசுலாமியர்களே போரில் வென்றார்கள்
இந்துக்கள் இந்துக்களையே வென்றார்கள்
கிறித்துவர்கள்டச்சுக்காரர்களை பிரஞ்சுக்காரர்களை
கடவுள்கள் கடவுள்களையே கொன்றார்கள்
ஒரு பவுண்ட் பாண்
மற்றும் கலால்வரிகள் ஆக்ட்ராய் எனும் வணிக நுழைவுவரி என
மாட்சிமைதாங்கிய ஜார்ஜ் எல்லா நாணயங்களையும் செல்லாதாதாக்கினான்
தில்லியை இங்கிலாந்தின் காலனியாக்கிய ரிப்பன் பிரபு எங்கள் அப்பன்
தீபகற்பத்தின் தென் பகுதியில் தில்லிக்கப்பாலும் மக்கள் இருக்கிறார்கள்
என்பதைக் கண்ட வைஸ்சிராய்கள் சில மண்கோட்டைகளை தகர்த்தார்கள்
வெப்ப மண்டல அம்மை கண்டு
குளிர்பிரதேசங்களில் குடி யிருந்து கொண்டார்கள்
தில்லியில்வைத்துதான் திரும்பியது
தன்னாட்சி
ஒருவன் மகாபாரதத்தைமறுபடியும்எழுதுகிறான்
சிலர்இராமாயணத்தை உபதேசிக்கிறார்கள்
பாவப்பட்ட இந்தியா காசியில் ஓய்வெடுக்கிறது
அங்கே நிகழும் கூட்டு மரணம்
பிறகு கொஞ்சம் தலை மழிக்கப்பட்டபெண்களின் காதல் கதைகள்
சாம்பல் தடவியசடைமுடி நிர்வாணிகளில் நர மாமிசினிகள் மேலும் புண்ணியவான்கள்
ருல்போ இத்தாலியை இறந்தவர்களின் நகரம் என்றான்
இறந்தவர்களின் வன்மத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
அதிகம் மக்கள் தில்லியில்
ஜார்ஜ் அதை புதுதில்லியாக்கினான்
அவன் இந்தியாவை இந்துக்களை முசல் மான்களை சீக்கியர்களை இறுதியாக ஜந்தர் மந்திரில் வைத்து ஒடுக்கி ப்போனான்
பல்லாயிரம் காலம்தொடரும் பழைய கொலைமுறை யூனியன் காலனிக் கலவரங்கள்
தெற்கிலிருந்து பலகாதம் கொண்ட தொழுவம் இருக்குமிடம்
ஆம் அது ஒரு பெட்ரோபரோமா

***

யவனிகா ஸ்ரீராம்


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular