Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்நான் சட்டங்களைக் களைந்து…

நான் சட்டங்களைக் களைந்து…

***

அழகான பெண்ணே…

நான் திணை இல்லாதவள்..

உன்னிடம் பேசிய பிறகு மனது மிகவும் கனக்கிறது…

நீ படித்ததும் நான் கண்டதும் ஒன்றேதான். ஆனால்…

நான் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறேன்… தெரிந்துகொள் …

மீன்களுடன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த எனக்கு மறுக்கப்படும் நதிகள்…

குறிஞ்சிக் குன்றுகளுக்காக அலையும் என் தேனீக்கள் தற்கொலைச் செய்கின்றன.

மலைகளைத் தேடும் கடமான்கள் கொம்புகளைக் களைந்து தலைமுறைகளை மறுக்கின்றன.

பாறைச் சிகரங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்ட வரையாடுகள்
இதோ என்னுடன் எங்குச் செல்வதென்று அறியாமல்..?

வரப்புகளில் வீடுவைக்க மண்ணின்றிக் கதறும் வயல் நண்டுகள்…

நான் பஞ்சாக்னி நடுவில் தவமிருக்கிறேன்
எனக்கு ஐம்பூதங்கள் கனவுகளாக..
.
கதிரவனே.. தவத்திற்கு நீ ஐந்தாம் அக்னி.

இமை அசையாமல் உன்னைப் பார்க்கிறேன்.

இவர்களின் நிலங்களில் பெய்யாதே
உன் தங்க நிற உயிரூற்று நின்று விடட்டும்..

நோவாவின் பெட்டகத்தைத் திரும்பத் தந்துவிடு
நானும் அனைத்து உயிர்களும் வற்றாத பிரளயத்தில்…
ஓயாத மழையில்…

பெண்ணே நீ படித்த கோட்பாடுகளில் அடிமைத்தனத்தின் நாற்றம்…

கண்களை மூடியவனின் தெருக்களும் நகரங்களும் வளர்ந்து கொண்டே…

அங்கெல்லாம் வெளிரிய முகங்களை அலங்கரித்தவர்கள்…

அவர்களின் பெண்களின் முலைகள் விந்துகளை வெளியேற்றுகின்றன.
அவை அவர்களின் கர்ப்பத்திலேயே வீழ்ந்து வளர்ந்து
கோரமான உருவம் கொண்ட மனிதர்களைப் போன்ற
விலங்குகளை பெற்றெடுக்கின்றனர்…

கதிரவனே… அந்தக் கோர விலங்குகள் பெண்களைத் தின்று வளர்கின்றன..

பெண்ணே.. அவனிடம் சொல்.. நகரங்களின் மீது கருப்பைகளின் சாபம் வீழ்ந்து விட்டதென்று…

நான் உன் கோட்பாடுகளையும் சட்டங்களையும் களைந்து.


***

மீரா மீனாட்சி – மும்பை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular