Friday, March 29, 2024

மழையாதல்

எல்லார்க்கும்
எல்லாமும்
சிற்றஞ்சிறுபரல்
உதிர்க்கும்
செவ்வி
எல்லாவிடத்தும்
ஓர் மெல்லினம்
யாருக்கேனும் வாய்த்ததுண்டா
முத்தாகும் சித்தி
தைரியமாய் உகுக்கலாம்
கண்ணீரை
துடைக்க உண்டு
நீர்க்கைகள்
இரைச்சல் சங்கீதம்
மழை உணர்த்தும்
தாய்மடிச்சூடு
என்பிலதனை வெயில்போலக் காயுமே
மழையில்லா மனம்
நின் குழல் பெய்த மழை
துளிர்த்திடச் செய்யும்
நீயெனும் பூவை
யாரும் ஆகலாம்
மழை கண்டு ஆடும் மயில்

– மணிவண்ணன் வெங்கடசுப்பு

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular