Friday, March 29, 2024
Homesliderபுகுமுகம் - ஆசிரியர் பக்கம்

புகுமுகம் – ஆசிரியர் பக்கம்

பொறுப்பாசிரியர் : அகரமுதல்வன்

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் அவர்களுக்கு சிறப்பிதழ் ஒன்றை உருவாக்க வேண்டுமென எனக்குள் எழுந்த விருப்பம் ஒரு வாசகனுடையது. நான் லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதைகளை வாசிக்கத்தொடங்கிய நாட்களில் வியப்பு மேலிட்டது. அவருடைய கதையுலகின் பின்னணிகள் ஒவ்வொன்றும் தனித்தனியானவை. தீவிரமான இலக்கிய வாசகன் ஒருவன் தவறவிடக்கூடாத எழுத்தாளர்களில் லஷ்மி சரவணக்குமாரும் ஒருவர் என துணிபுகொண்டேன். எழுத்தாளனுக்கும் அவனது மொழிக்குமிடையே நிகழும் இணக்கம் குறித்தும் அவன் மொழியை ஒரு சவாலாகக் கொண்டு தனது புனைவுலகை கட்டியமைக்கும் விதம் குறித்தும்  லக்ஷ்மி சரவணக்குமாரின் படைப்புக்களில் காணும் தெளிவு குறித்தும் ஆச்சரியப்பட்டேன். இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் தமிழ்ச் சிறுகதைப் பரப்புக்குள் பிரவேசம் கொண்ட படைப்பாளிகளுள் லக்ஷ்மி சரவணக்குமார் தனித்துவம் மிக்கவர். அதன்பொருட்டு அவருடைய எழுத்தியக்கச் செயற்பாட்டின் மீது உரையாடலையும் கவனத்தையும் நிகழ்த்துவது அவசியமாகிறது. வாசக மரபு சுருங்கிய இந்தச் தமிழ்ச் சூழலில் எழுத்தாளர் ஒருவரின் படைப்புலகம் சார்ந்து சிறிய அவதானிப்பையும் உரையாடலையும் நிகழ்த்துவது முக்கியமெனப்படுகிறது. அந்த வகையில் யாவரும் இணையத்தளத்தின் வாயிலாக எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் சிறப்பிதழ் வெளியாகிறது. இந்த இதழில் பங்களிப்புச் செய்த சக எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் நன்றி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular