Friday, March 29, 2024
Homesliderநவீன் கவிதைகள்

நவீன் கவிதைகள்

01

ஆழக்கடலின்
ஆக்ரோச அலை
வந்தும் சென்றுவிடவில்லை.
கரையைச் சற்று முத்தமிட்டு
மெல்ல பின்வாங்குகிறது,
சூன்யம் வந்து இருளை கவ்வுகிறது
கடலைவிட்டு
கடல்
நகர்ந்து செல்வது இனிதே.

***

02

நிசப்தம் அணைத்துக் கொண்ட
பிறகு தான்
சூன்யம் இருளை ஆக்கிரமிக்கிறது.

***

03

வீட்டின் நடுவில் ஊசல் ஆடுகிறது
ஆச்சியின் உயிர்
உயிரின் ஊசல் இறப்பின்
அறிகுறிச்செய்தி
ஊசலுக்குப் பிறகு தான்
ஆன்மா பிரிவுக்கு
காற்றிடம் பேசிய பிறகு தான்
மண்ணை முத்தமிடுகிறது
உதிர்ந்த சருகு.

***

நவீன் – வேலூரைச் சேர்ந்த நவீன் அடிப்படையில் ஒரு பிஸியோதெரபி மருத்துவர். தற்போது நண்பர்களுடன் சேர்ந்து அவர் ஊரில் இலக்கிய அமைப்பை தொடங்கியிருக்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular